நித்தம் நீடுதவம்
செய்ததன் பலன்தான்
நீ... என, நினைத்த பொழுதுகளை
நினைத்து... நீரால் நனைத்துகொள்கிறேன்
இன்று!
திங்கள், 26 பிப்ரவரி, 2018
வியாழன், 8 பிப்ரவரி, 2018
தன்னம்பிக்கை வரிகள்
கடந்த காலம் காணாமல் போனது
எதிர்காலம் எதிர்பார்ப்பில் இருக்கிறது
நிகழ்காலம் நிஜமாய் நிற்கிறது
புன்னகை பூத்து
புத்துணர்வுடன் எழுந்து வா....
வெற்றி உன் கையில்!
📝 வி.சாந்தி
தன்னம்பிக்கை
சிதையாநெஞ்சுகொள்
சில நேரங்களில் பல இன்னல்களை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும், அப்போதெல்லாம் தான் நமது உண்மையான உள்முகம் நமக்கே தெரிய வரும். நாம் எடுக்கும் முடிவுகள், செயல்படும் தன்மை நம்மையே ஆச்சரியப்படுத்தி இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று கேட்க தூண்டும்!
துன்பமற்ற யாரும் இங்கே இல்லை, மாறாக சிலர் காட்டிக்கொள்கிறார்கள், சிலர் காட்டிக்கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு நொடி நம்பிக்கை குறையும் போதுதான் இதயத்தில் கவலை, கலக்கம் குடி கொண்டு நோய்களை உருவாக்கும். கொஞ்சம் தள்ளிப்போடலாம், இல்லையேல் எதிர்த்து போராடலாம். மொத்தத்தில் பொறுமை மிக மிக அவசியம். நாளை உலகையே ஆளும் சக்தியே இன்றைய நம்பிக்கையில் தான் சாத்தியம். தைரியமாக இருங்கள்.
எங்கே செல்கிறோம்?
நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...
-
கடந்த காலம் காணாமல் போனது எதிர்காலம் எதிர்பார்ப்பில் இருக்கிறது நிகழ்காலம் நிஜமாய் நிற்கிறது புன்னகை பூத்து புத்துணர்வுடன் எழுந்து வா......
-
இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாட்களிலும்... வெற்றி நமதே இப்போதில் இருந்து நேர்மறையாக (positive) சிந்தித்தால்! இனிய காலை வணக்...
-
கடவுளைத் தேடி…. ~~~~~~~~~~~~~ ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது. பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை...