வியாழன், 17 மே, 2018

தன்னம்பிக்கை /சுயதொழில்

ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து மிஸ்டர் எக்ஸ்ஸுக்கு தபாலில்இன்டர்வ்யூ வந்திருந்தது. இன்டர்வ்யூக்கு சென்ற அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அவர் சரியாகப் பதில் சொன்னதும் அவரை வேலைக்கு தேர்வானதாகத் தெரிவித்து அவரது email-idஐ தெரிவித்தால் நியமன ஆணையை அனுப்புவதாகச் சொன்னார்கள். மிஸ்டர் எக்ஸ்ஸுக்கோ ஈமெயில் என்ன என்றாலே தெரியாது என்று சொல்லிவிட்டார். எனவே அந்த வேலை கிடைக்கவில்லை. வெளியே வந்த எக்ஸிடம் இருந்த கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து தக்காளி வாங்கினார். அந்த சமயத்தில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் விற்பனை செய்து கணிசமான லாபம் ஈட்டினார். இதே போல பல தொழில்கள் துவங்கி தொழிலதிபர் ஆனார். ஏகப்பட்ட கம்பெனிகள், கார்கள் என வாங்கினார். அவற்றை இன்ஸ்யூர் செய்ய ஏற்கனவே இவருக்கு வேலை கொடுக்க
இன்டர்வ்யூ செய்த கம்பெனிக்குப் போனார். அங்கு சென்ற அவரிடம் உங்களுக்கு ஈமெயில் மூகவரி இருந்தால் இங்கு வேலை கிடைத்திருக்குமே என்றார்கள். இவர் சொன்னார், எனக்கு இங்கு வேலை கிடைத்திருந்தால் உங்களில் ஒருவனாக இருந்திருப்பேன். ஆனால் இப்போது உங்களைப் போல் நூற்றுக் கணக்கான பேருக்கு வேலை கொடுத்திருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...