திறமை நிறைந்த உலகில்
தினம் புலம்பி
என்ன செய்ய போகிறாய்,?
கொள்ளை திறமைகளை
உள்ளே மறைத்து
உண்மை அறிந்தும்
ஊமையாக நிற்பாயோ,?
செயல்கள் உனதாகும்
பலன்கள் உனக்கேயாகும்!
விடியலுக்கு காத்திருந்தாய்
விடிந்தபின்னும் கண்மூடலா?
நாளை உனதாகும்
நம்பிக்கை உள்ளிருந்தால்
இன்றை இனிதாக்கு!
இயலாததென்று ஏதுமில்லை
நீ இறைவனின் அம்சமாதலால்!
விழி! விழி! விழி!!!
வெற்றி நிச்சயம்!
- வி.சாந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக