வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அன்பெனும் பண்பு

நேற்று முதல் இராமு மிகவும் பிஸியாக இருக்கிறார். அலுவலகத்தில் புதிய நபரை வேலைக்கு சேர்க்க வேண்டும். அவருக்கேற்ற ஒரு பி.ஏ வை பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம. இதற்காக அவர் தேடுவது நல்ல பண்புகள் மிக்க மனிதரைத் தான்!

நேரம் காலை 10-30 ., சுறுசுறுப்புடன் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்து நபர்கள் பி.ஏ பணிக்காக காத்திருக்கிறார்கள்., அதில் "மோகனும்" ஒருவர்.

"உள்ளேயிருந்து அழைப்புக் குரல் எப்போது வரும்?"....என்று, அனைவரும் அலுவலக அறையையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ப்யூன் தேநீருடன் வருகிறார்.., அந்த பத்து பேருக்கும், வரிசையாக கொடுத்துக்கொண்டே வருகிறார். திடீரென ஏதோ ஒரு மாதிரி தலைசுற்றல் மாதிரி ஆகி... கையில் இருந்த தேநீரை அங்கு அமர்ந்திருந்தவர்கள் மேலே கொட்டி விடுகிறார் ! 

அவர்களில், ஐந்து நபர்கள்..தன் சட்டையை பார்த்து விட்டு 'கோபமாக' எழுகின்றனர்.!
நான்கு நபர்கள் "ஐயோ"! இப்படி ஆகிவிட்டதே...என்று கவலைப்பட்டு சோர்வடைகின்றனர்.

மோகன் மட்டும், உடையைப் பற்றியோ..பணியைப்பற்றியோ..
யோசிக்காமல்..அவரைத்தாங்கிப் பிடித்து..'ஐயா என்ன ஆச்சு'? என்கிறார்..அன்புடன். 

உடனே ப்யூன் , தெளிந்த நிலையில் கம்பீரமாக நின்று கொண்டு.."யூ ஆர் செலக்டட்" என்று கைகொடுக்கிறார்!!

வி.சாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...