நேரம் காலை 10-30 ., சுறுசுறுப்புடன் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்து நபர்கள் பி.ஏ பணிக்காக காத்திருக்கிறார்கள்., அதில் "மோகனும்" ஒருவர்.
"உள்ளேயிருந்து அழைப்புக் குரல் எப்போது வரும்?"....என்று, அனைவரும் அலுவலக அறையையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ப்யூன் தேநீருடன் வருகிறார்.., அந்த பத்து பேருக்கும், வரிசையாக கொடுத்துக்கொண்டே வருகிறார். திடீரென ஏதோ ஒரு மாதிரி தலைசுற்றல் மாதிரி ஆகி... கையில் இருந்த தேநீரை அங்கு அமர்ந்திருந்தவர்கள் மேலே கொட்டி விடுகிறார் !
அவர்களில், ஐந்து நபர்கள்..தன் சட்டையை பார்த்து விட்டு 'கோபமாக' எழுகின்றனர்.!
நான்கு நபர்கள் "ஐயோ"! இப்படி ஆகிவிட்டதே...என்று கவலைப்பட்டு சோர்வடைகின்றனர்.
மோகன் மட்டும், உடையைப் பற்றியோ..பணியைப்பற்றியோ..
யோசிக்காமல்..அவரைத்தாங்கிப் பிடித்து..'ஐயா என்ன ஆச்சு'? என்கிறார்..அன்புடன்.
உடனே ப்யூன் , தெளிந்த நிலையில் கம்பீரமாக நின்று கொண்டு.."யூ ஆர் செலக்டட்" என்று கைகொடுக்கிறார்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக